ஐஸ் போதைப்பொருள் விநியோகம்: உடல்பிடிப்பு சிகிச்சை நிபுணர் கைது

நாட்டின் பல பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் ஹம்பாந்தோட்டை(Hambantota) பொது வைத்தியசாலையின் உடல் பிடிப்பு சிகிச்சை நிபுணர் தங்காலை (Tangalle) ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 4 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் உடல்பிடிப்பு வைத்தியராக கடமையாற்றி வரும் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தங்காலை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
203 Views
Comments