JUN
22
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மருந்து தட்டுப்பாடு இல்லை
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாட வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பற்றாக்குறையாக உள்ள சில அத்தியாவசிய மருந்துகளுக்கு மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
77 Views
Comments