தம்மிக்க பெரேராவின் நியமனத்திற்கு எதிராக மனுத்தாக்கல்
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்த தீர்மானத்தை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் (CPA) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறும், தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை அடிப்படை உரிமை மீறலாக அறிவிக்குமாறும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கோரியுள்ளது.
54 Views
Comments