இன்றைய வானிலை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 மி.மீ. வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் 50மி.மீ. க்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

views

274 Views

Comments

arrow-up