மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மாணவர் கைது!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மாணவர் கைது!

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மாணவர் கைது!

கந்தானை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் 15 வயதுடைய மாணவன் ஒருவன் தனியார் வகுப்பு ஒன்றிற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கந்தானை தென் படகம பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஒன்றிற்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பில் கந்தானை பொலிஸாரிடம் வினவிய போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

குறித்த மாணவனுக்கு போதைப்பொருளை வழங்கிய நபர் யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

views

324 Views

Comments

arrow-up