களனி ஆற்றில் குழந்தையை வீசிய தாய்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

களனி ஆற்றில் குழந்தையை வீசிய தாய்

களனி ஆற்றில் குழந்தையை வீசிய தாய்

தாயொருவர் (42) தனது குழந்தையை ஆற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் நேற்று (15) ஐந்து வயதுடைய தனது குழந்தையை களனி ஆற்றில் தாய் வீசியுள்ளதாகவும் அதன் பின்னர் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது பிரதேசவாசிகளின் தலையீட்டில் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

பிரதேசவாசிகள் தாயை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.களனி ஆற்றில் வீசப்பட்ட குழந்தை இன்னும் காணவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

காணாமல் போன குழந்தையை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

views

442 Views

Comments

arrow-up