NOV
16
நாளை முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்படுகிறது..
நாளை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு விதிக்கப்படும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, கடவுச்சீட்டு வழங்குவதற்கான பொதுச் சேவைக் கட்டணம் 3500 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாகவும் கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒரு நாள் சேவைக் கட்டணம் 15000 ரூபாவிலிருந்து 20000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
118 Views
Comments