அடுத்த 48 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு!
அடுத்த 48 மணி நேரத்தில் மழை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்கில் வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
96 Views
Comments