NOV
10
COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்..
எகிப்தில் நடைபெற்ற COP-27 உலக காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (10) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநாட்டிற்காக நாட்டிலிருந்து புறப்பட்டார்.
இந்த மாநாட்டின் போது பிரித்தானிய பிரதமர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
92 Views
Comments