ஜனவரி முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
16

ஜனவரி முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்..

ஜனவரி முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்..

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

கொட்டாஞ்சேனை பாடசாலையொன்றில் நேற்று (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் முன்னோடித் திட்டம் குறித்த பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

 

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு போதியளவு உணவு கிடைப்பதில்லை என பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட அமைச்சர், மதிய உணவு திட்டத்திற்கு அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக அரசாங்கம் 4 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

views

131 Views

Comments

arrow-up