தென்கிழக்கு ஆசியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

தென்கிழக்கு ஆசியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

தென்கிழக்கு ஆசியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

தென்கிழக்கு ஆசியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

 

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் உதவிகளையும் ஜனாதிபதி பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இலங்கைக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான புவியியல் நெருக்கத்தின் காரணமாக சுற்றுலா ஊக்குவிப்பு, முதலீட்டு வாய்ப்புகள், விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் அவர்களுக்கு விளக்கமளித்தார்.

 

தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் தொடர்பில் பல விதமாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

views

63 Views

Comments

arrow-up