கட்டுபெத்தையில் இரட்டை கொலை...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

கட்டுபெத்தையில் இரட்டை கொலை...

கட்டுபெத்தையில் இரட்டை கொலை...

கட்டுபெத்த - பிலியந்தலை வீதியில் இன்று (29) பிற்பகல் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

பிலியந்தலை வீதியில் கட்டுபெத்த சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய வேனொன்றில் பயணித்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வேனின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டு ஓட்டுநர் இருக்கையில் இருந்து சுடப்பட்டது.

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் வேனில் இருந்த சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

 

உயிரிழந்தவர்கள் பாணந்துறை பின்வத்த மற்றும் களுதாவல ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

உயிரிழந்த இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

பொலிஸாரின் விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் நிலந்த குமார சில்வா என அடையாளம் காணப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 

கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

views

126 Views

Comments

arrow-up