ரட்டா உள்ளிட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

ரட்டா உள்ளிட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில்...

ரட்டா உள்ளிட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில்...

கோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

சமூக ஊடக செயற்பாட்டாளர்களான ரட்டா, தம்மிக்க முனசிங்க, லஹிரு வீரசேகர, வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர், ஜகத் மனுவர்ண, எரங்க குணசேகர மற்றும் ஜெஹான் அப்புஹாமி ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்கள் இன்று பிற்பகல் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளனர்.

views

55 Views

Comments

arrow-up