நாளை வரும் கப்பலின் பெட்ரோல் நாளை மறுநாள் விநியோகிக்கப்படும்
எரிபொருளுக்காக நேற்றைய தினம் 34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது தரையிறக்கப்படும் எரிபொருளின் இருப்பு மின் உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் டுவிட்டரில் சுட்டிக்காட்டினார்.
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தேசிய மின் உற்பத்தியுடன் இணைக்கப்படும் வரை 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு தொடரும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, பெற்றோல் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், அதன் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் சனிக்கிழமை டீசல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.
61 Views
Comments