மன்னாரில் இரட்டை கொலை - 6 சந்தேகநபர்கள் கைது!
மன்னார் உயிலங்குளம் நொச்சிக்குளம் பகுதியில் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்கள் 33 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
94 Views
Comments