இரண்டு பிள்ளைகளின் தந்தை எரிபொருள் வரிசையில் உயிரிழந்துள்ளார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

இரண்டு பிள்ளைகளின் தந்தை எரிபொருள் வரிசையில் உயிரிழந்துள்ளார்

இரண்டு பிள்ளைகளின் தந்தை எரிபொருள் வரிசையில் உயிரிழந்துள்ளார்

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று (29) காலை லொறியில் மோதி உயிரிழந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்தவர் அளுத்கம, தர்கா டவுன், அலவத்துகொட, புவக்வத்தையைச் சேர்ந்த சிங்கப்புலி ஹேவகே ஆனந்த (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

குறித்த நபர் அளுத்கம, தர்கா நகரில் உள்ள அம்பகஹா சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த போது அளுத்கமவிலிருந்து மத்துகம நோக்கி பயணித்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகி சீனவத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

விபத்துக்குள்ளான லொறி மத்துகம நோக்கி தப்பிச் சென்றுள்ளதாகவும், சாரதி இன்று காலை சரணடைந்துள்ளதாகவும், லொறியை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

views

50 Views

Comments

arrow-up