வியாளேந்திரனின் ஒருங்கிணைப்புச் செயலாளர் இலஞ்ச புகாரில் கைது!
பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனின் ஒருங்கிணைப்புச் செயலாளராக உள்ள அவரது சகோதரரும், தொழிலதிபருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் காணி அபிவிருத்தி மற்றும் விற்பனைக்கு உதவுவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 1.5 மில்லியன் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளனர்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
109 Views
Comments