கம்பஹாவில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் ஊடாக நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹாவின் பல பிரதேசங்களுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைபடும்.
கம்பஹா நகரம், மிரிஸ்வத்த வீதியில் ஹன்சகிரி வீதி வரையான பகுதி, ஒருதொட்ட வீதியில் கறுப்புப் பாலம் வரையான பகுதி மற்றும் புகை பரிசோதனை நிலையம் வரையான பகுதி மற்றும் ஜா-எல வீதியின் புகைப் பரிசோதனை நிலையப் பகுதிக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
50 Views
Comments