நாளை இலங்கைக்கு வரும் பெட்ரோல் கப்பல்...
பெற்றோல் கப்பல் ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளது.
பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை மறுதினம் மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
47 Views
Comments