19 கோடி தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்துடன் 2 இந்தியர்கள் கைது!
சுமார் 19 கோடி தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழரை கிலோ தங்கமும் 80,000 அமெரிக்க டொலர்களும் 18,800 யூரோக்களும் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் 53 மற்றும் 42 வயதுடையவர்கள், மற்றைய நபர் 46 வயதான இலங்கையர் ஆவார்.
இந்த தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சூட்கேஸ்களிலும், கால்சட்டை, சட்டை பாக்கெட்டுகளிலும் மறைத்து வைத்துக்கொண்டு வந்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த நபர் தொடர்ச்சியாக விமானங்களில் பயணித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
58 Views
Comments