ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நானே..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நானே..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நானே..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

 

தாம் நீக்கப்பட்டு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தமக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய கட்சிகள் இந்த மாற்றம் குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கடிதம் மூலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, இந்த விடயம் அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் சட்டவிரோதமானது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்படுவது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் கிடைத்தால், அது தொடர்பில் செயற்படுவதைத் தவிர்க்குமாறும் அமைச்சர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உரிய கடிதத்தில் அறிவித்துள்ளார்.


 

views

18 Views

Comments

arrow-up