மஹாஎலிய காப்புக்காட்டில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது!
பொகவந்தலாவை, மஹஎலியவில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை மஹஎலிய ஸ்ரீபாத காப்புக்காட்டின் சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் வகையில் குறித்த நபர்கள் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக ஹட்டன் பிரதேச வன அதிகாரி வி.ஜி.கே. ருக்ஷான் குறிப்பிட்டார்.
இரத்தினக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் குறித்த இடத்தின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
100 Views
Comments