ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த 7 பேருக்கு பிடியாணை!
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
92 Views
Comments