மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் அனைத்து பொது சேவைகளையும் பரவலாக்குவதற்கான நடவடிக்கைகள்
மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் உள்ள அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவதுடன் வீட்டிலிருந்தே கடமையாற்றுவது அவசியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பொதுச் சேவைகளை வினைத்திறனாக்க புதிய முறைகளை அறிமுகப்படுத்துதல், மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்கல் மற்றும் அரசாங்க செலவினங்களை நிர்வகித்தல் தொடர்பான கலந்துரையாடலில் இன்று முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் இத்தகைய சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உட்பட ஏனைய அரச நிறுவனங்களை மேலும் பரவலாக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
352 Views
Comments