JUN
15
11 நாட்களுக்குப் பின் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பித்த லிட்ரோ
லிட்ரோ நிறுவனம் 11 நாட்களுக்குப் பின்னர் அதன் விநியோக செயல்முறையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
3,500 மெற்றிக் தொன் எரிவாயு சிலிண்டர்களை வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் தகன மயானங்களுக்கு விநியோகிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட காணொளிக் காட்சியில் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதையடுத்து, முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயுவை இறக்கும் பணி நேற்று ஆரம்பமானது.
407 Views
Comments