மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் மீதான சபாநாயகரின் பிரமாண பத்திரம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் மீதான சபாநாயகரின் பிரமாண பத்திரம்

மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் மீதான சபாநாயகரின் பிரமாண பத்திரம்

கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அவர்கள் 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தை திருத்துவதற்கான இலங்கை மின்சார (திருத்தம்) சட்டமூலம் மீதான தனது பிரமாணப் பத்திரத்தை இன்று (15) பதிவு செய்தார்.

 

இந்த சட்டமூலம் கடந்த (09) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் எவ்வித திருத்தங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டது.

 

இது மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி உரிமத்திற்கு விண்ணப்பிக்க ஒரு நபருக்கு தகுதி அளிக்கிறது.

 

இந்தத் திருத்தம் 25 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மின் உற்பத்தி உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, உற்பத்தித் திறனில் எந்தத் தடையும் இல்லாமல் எவரும் விண்ணப்பிக்க அனுமதிக்கும்.

 

அதன்படி, இன்று (15) முதல் இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டம் 2022 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டமாக இலங்கையின் சட்ட அமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

views

408 Views

Comments

arrow-up