MAY
07
கடவுச்சீட்டு வழங்கல் மீண்டும் ஆரம்பம்

எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் வழமையான சேவையின் கீழ் இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒரு நாள் சேவை நடைமுறையில் இல்லை எனவும், கூடிய விரைவில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
242 Views
Comments