MAY
01
இன்று எந்தவொரு சாலையும் நிரந்தரமாக மூடப்படாது - காவல்துறை

கொழும்பில் இன்று (01) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்ட போதிலும், எந்தவொரு வீதியும் நிரந்தரமாக மூடப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் ஒரு இடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர்வலம் மற்றும் கூட்டங்களின் போது முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
381 Views
Comments