இன்று மட்டும் கூடும் பாராளுமன்றம்...
இந்த வாரம் பாராளுமன்றம் இன்று (22) மாத்திரம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (21) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை இந்த வாரம் நேற்றிலிருந்து 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு முன்னைய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
102 Views
Comments