காலி வீதி தெஹிவளையில் தடைப்பட்டுள்ளது
தெஹிவளை பிரதேசத்தில் காலி வீதியை மறித்து எரிபொருளை கோரி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலைமையை கருத்தில் கொண்டு காலி வீதி ஊடாக கொழும்பு வரும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, எரிபொருளைக் கோரி பஞ்சிகாவத்தை சந்தியில் மக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் அரை மணித்தியாலங்கள் குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் பொலிசார் வந்து, ஒரு மணி நேரத்திற்குள் எரிபொருள் நிரப்புவதாக உறுதியளித்து சாலையை போக்குவரத்திற்கு மீண்டும் திறந்தனர்.
98 Views
Comments