பல்கலைக்கழக போராட்டம் தொடர்பான பொலிசாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்குமாறு குருந்துவத்தை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில வீதிகளுக்குள் நுழைய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை தடை செய்யும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இதனை நிராகரித்த பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திறன் இருந்தாலும் அரச நிறுவனங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
460 Views
Comments