கரையோர மார்க்கத்தில் இன்றும் 25 ரயில் சேவைகள் இரத்து

கரையோர மார்க்கத்தில் இன்றும் 25 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வௌ்ளவத்தை - கொழும்பு கோட்டை இடையிலான ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக திணைக்களம் முன்னதாகவே அறிவித்திருந்தது.
காலி மார்க்கத்திலிருந்து நேற்று ஆரம்பமான திருத்தப் பணிகள் இன்றும் நாளையும் தொடரவுள்ளன.
இதனால் நேற்றும் கரையோர மார்க்கத்தில் 25 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
232 Views
Comments