பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
25

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலாவிற்கு வந்த நபரொருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

கடந்த 18 ஆம் திகதி மனைவி உட்பட 44 பேருடன் குறித்த நபர் இலங்கைக்கு சுற்றுலா வந்ததாக தெரியவருகின்றது.

 

திருகோணமலை - அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு தங்கியிருந்த போது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து 1990 அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

views

234 Views

Comments

arrow-up