நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
மீனவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்திய மீனவர்கள் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
236 Views
Comments