MAR
18
நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வெப்பமான வானிலையே இதற்கான காரணமாகும்.
குருநாகல், பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது.
குருநாகலில் காற்று மாசு தரக்குறியீடு 102 ஆகக் காணப்படுவதுடன், பதுளையில் 106 ஆகவும் அநுராதபுரத்தில் 104 ஆகவும் காணப்படுகின்றது.
227 Views
Comments