சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வின் போது பொலிஸார் சுற்றிவளைப்பு; களுகங்கையில் குதித்தவர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
18

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வின் போது பொலிஸார் சுற்றிவளைப்பு; களுகங்கையில் குதித்தவர் உயிரிழப்பு

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வின் போது பொலிஸார் சுற்றிவளைப்பு; களுகங்கையில் குதித்தவர் உயிரிழப்பு

 இரத்தினபுரி- களுகங்கையில் மூழ்கி காணாமற்போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

சமகிபுர பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 

இரத்தினபுரி - பௌத்த விகாரைக்கு அருகாமையிலுள்ள களுகங்கையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைப்பதற்காக பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

இதன்போது, அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவரும் களுகங்கையில் குதித்துள்ளனர்.

 

அவர்களில் இருவர் மீட்கப்பட்டதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

views

226 Views

Comments

arrow-up