இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது
இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் சுமார் 2000 மெற்றிக் தொன் எரிபொருள் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் வார இறுதியில் மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் எண்ணெய் மற்றும் டீசல் இருப்புக்கள் தொடர்பில் நாளை மறுஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
239 Views
Comments