கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஃபுளோரோனா தொற்று..!
ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃபுளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஃபுளோரோனா இருப்பது இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவம் இதுவே முதல்முறை என்று அரபு செய்திகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் தனது குடிமக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளது.
3 வது டோஸ் எடுத்து 4 மாதங்கள் கழித்து நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் 4 வது டோஸ் எடுக்கலாம்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமான இருந்தபோதிலும், இஸ்ரேலில் தினமும் சுமார் 5,000 கொரோனா தொற்றுக்கள் இன்னும் அடையாளம் காணப்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில் ஃபுளோரோனா தொற்று உள்ள ஒரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
222 Views
Comments