சிறை கைதிக்கு போதைப்பொருள் கொடுக்க வந்த நபர் கைது
வெலிக்கடை சிறை வளாகத்தின் எதிரே உள்ள பேஸ்லைன் மாவத்தையின் நடைபாதையில் தங்கியிருந்த சந்தேக நபரை சிறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்த விசாரணையில் அவர் ஒரு கைதிக்கு போதைப்பொருள் கொடுக்கும் நோக்கத்தில் அங்கு தங்கியிருப்பது தெரியவந்தது.
ஆனால் அவரிடம் போதைப்பொருள் இருக்கவில்லை.மேலும் குறித்த நபரிடமிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்று மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பில் வசிப்பவர். அவர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
129 Views
Comments