மேலும் ஒரு இலட்சம் டோஸ் ஃபைசர் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன
இன்று காலை மேலும் 100,000 டோஸ் ஃபைசர் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
தோஹாவிலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது.
மேலும், நேற்று 58,994 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சைனோஃபார்மின் இரண்டாவது டோஸ் 25,838 பேருக்கும், முதல் டோஸ் 3,136 பேருக்கும் கொடுக்கப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்தது.
மேலும், ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 20,284 பேருக்கு வழங்கப்பட்டது.
source:hirunews
134 Views
Comments