பாகிஸ்தானில் விஷ வாயு கசிவு!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

பாகிஸ்தானில் விஷ வாயு கசிவு!

பாகிஸ்தானில் விஷ வாயு கசிவு!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராவத் மாகாணத்தில் உள்ள கிணற்றில் விஷ வாயு கசிந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

கிணற்றை சுத்தம் செய்வதற்காக கிணற்றில் இறங்கிய நபர் விஷ வாயுவை சுவாசித்ததில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மீட்பதற்காக மேலும் ஏழு பேர் கிணற்றில் இறங்கினர். அவர்களும் சுயநினைவின்றி இருந்த நிலையில், சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் வந்து அனைவரையும் மீட்டனர், ஆனால் முதலில் கிணற்றுக்குள் நுழைந்த நபரும் அவரைக் காப்பாற்ற கிணற்றுக்குள் சென்ற ஏழு பேரில் நால்வரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

views

89 Views

Comments

arrow-up