JUN
22
இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான உத்தேச தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது.
புதுடெல்லியில் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்திய ஜவுளி, தோல் மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
95 Views
Comments