665 பேர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியுள்ளனர்
இன்று (07) காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாததாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
அதன்படி, அக்டோபர் 30 முதல் இதுவரை 66,668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக 69 வாகனங்களை பொலிசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
source:adaderana
97 Views
Comments