டிப்பர் மோதியதில் 26 பேர் காயம்
திருகோணமலை-மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்தும், எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனங்களின் ஓட்டுநர்களும் அடங்குவர்.
199 Views
Comments