பிரதமர் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் அமைய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
புதிய பிரதமர் தனிப்பெரும்பான்மைக்கு அப்பால் அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறக்கூடியவராக இருக்க வேண்டும் என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் கூடிய விரைவில் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை கருதுகிறது.
புதிய அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
373 Views
Comments