பால்மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு...
எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் நாட்டில் பால் மா தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் பால் மாவின் விலை அதிகரிக்கலாம் என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக வங்கிகளில் கடன் பத்திரங்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
203 Views
Comments