மேலும் 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
20

மேலும் 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

மேலும் 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் இரண்டு இழுவை படகுகளில் 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

 

இலங்கையின் மன்னாருக்கு தெற்கே கடற்பரப்பில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 6 இழுவை படகுகளையும் 43 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

 

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 43 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

views

232 Views

Comments

arrow-up