மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

 மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 49 இலங்கையர்களில் சிலரை எதிர்வரும் நாட்களில் விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.


 
மியன்மார் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

 

மியன்மார் சைபர் முகாம்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

அதில் 53,000 பேர் சீனர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.

views

255 Views

Comments

arrow-up