ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
22

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடையாள அட்டையை வழங்குவதற்கான கால எல்லை எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

பிறப்புச்சான்றிதழ் இல்லாமையினால் இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நபர்களுக்காக இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் G.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

 

இந்த வேலைத்திட்டம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

எனினும் குறித்த கால எல்லையை நீடிக்குமாறு பிரதேச செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

views

232 Views

Comments

arrow-up