பாணந்துறை மருத்துவமனையில் இரண்டு பிரேத உடல்கள் மாறுபட்டுள்ளன
பாணந்துறை ஆதார வைத்தியசாலை பிரேதவறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உடல்கள் மாறுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையின் ஏழாவது வார்டில் இருந்து 89 மற்றும் 93 வயதுடைய இரண்டு பெண்களின் உடல்கள் மாறுபட்டுள்ளன.
மொரட்டுவையில் வசிக்கும் 89 வயதான முஸ்லீம் பெண் 21 ஆம் திகதி இறந்துள்ளார். அவரது உடலுக்கு பதிலாக அதே நாளில் பாணந்துறை வீரசிங்க மாவத்தையில் இறந்த 93 வயது பெண்ணின் உடல் மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடி பகுதியில் அவரது இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பாணந்துறை வீரசிங்க மாவத்தையில் வசிக்கும் 93 வயதுடைய பெண்ணின் உறவினர்கள் இறுதிக்கிரியைகளுக்காக பாணந்துறை மருத்துவமனைக்கு சென்று வினவியபோது, அவரது உடல் மாறுபட்டது தெரியவந்தது.
source:hirunews
137 Views
Comments